Friday, June 21, 2013

4.66. நெடிலடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.66. நெடிலடி முயற்சி

(குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் ஐந்துசீரில் முடியும்
நெடிலடி இயற்ற நாமும் முயல்வோம்

அளவொத்த எவ்வகை அடியும் எத்தளையும் கொண்டு
அடிகள் இரண்டுவரும் குறள்வெண் செந்துறையில் முனைவோம்.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)

கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.

வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.

மூச்சினை அடக்கி யாண்டு எண்ணுவது ஒருமைப்பட்டு
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?

முயற்சி 2.
(கலித்துறை)
வந்ததும் இருப்பதும் தெரியும் வருவது தெரியுமோ?
நொந்ததும் நிகழ்ந்ததும் தெரியும் நாளையென் தெரியுமோ?
பந்தைய எலிகள் வாழ்வில் விந்தைகள் ஏதுமுண்டோ?
சிந்தனை தறிகெட் டோடும் சிறுமதிதான் சாதனையோ?

முயற்சி 3.
(கலித்துறை)
தென்றலின் அலையில் தலைசாயும் நெற்பயிர் வயல்கள்
கன்றுடன் பசுக்கள் தொழுவம் திரும்பிடும் மாலை
மேற்கினில் மறையும் கதிரவன் ஒளியின் கீற்றுகள்
காற்றிலே ஊடுருவிக் கண்களில் பட்டு வழியும்.

4.66. நெடிலடிப் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

No comments:

Post a Comment