கவிதையில் யாப்பு

கவிதையில் யாப்பு
ரமணி

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. 
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில மாதங்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, 
அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, 
மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை 
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் 
மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் 
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, 
பிற நூல்களின் மூலம் யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில 
ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது 
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது, 
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது 
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் 
அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம். 
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, 
குறைகளைக் கூடியமட்டும் திருத்தி, 
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் 
ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

No comments:

Post a Comment