Thursday, May 30, 2013

4.64. சிந்தடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.64. சிந்தடி முயற்சி: கட்டளைக் சிந்தடி

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் சிந்தடி முயன்றிடு வோமா?
ஏழுமுதல் ஒன்பதுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் சிந்தடி புனைவோம் முதலிலே.

காலம் ஞாலம் பாலம் கோலம்
என்னும் சொல்வகை அடியெது கைவர
மாறுதல் அமைத்தல் வரைதல் நீங்குதல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
பாலங்கள் அமைத்துப்
பாவங்கள் நீக்கி
ஞாலம் நலம்பெறும் ஞானம் அறிவோமே.

ஏழு எழுத்துக் குறளடி (2 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலம் மாறிடும் உண்மை
ஞாலம் மாறுதல் உண்டோ?
பாலம் அமைக்கும் உள்ளம்
கோலம் வரைந்து பார்க்கும்.

எட்டு எழுத்துக் குறளடி (3 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கொண்ட
கோலங்கள் மாறலாம் அன்றோ?
பாலங்கள் அமைத்தல் நன்றே
பாவங்கள் நீங்குதல் என்றோ?

ஒன்பது எழுத்துக் குறளடி (3 + 3 + 3): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கொண்டுள்ள
கோலங்கள் மாறலாம் அல்லவோ?
பாலங்கள் அமைத்தல் நன்றாகும்
பாவங்கள் நீங்குதல் எப்போதோ?

4.64. சிந்தடி முயற்சி: சீர்வகைக் சிந்தடி

பழமொழிகள் இணைத்து:
நல்குரவு இல்லாத நாக்கினை
வல்லிதின் அடக்க விழைவோம்
கல்தேயினும் தேயாது சொல்லென்பதால்
நல்லதே உரைக்கப் பழகுவோம்.

வஞ்சி விருத்தக் குறட்பாக்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா 
வானம் வழங்கா தெனின்.

நாளெல்லாம் நடையாய் நடந்ததில்
தாளெல்லாம் ஆயின திண்ணென;
அற்புதம் ஏதேனும் நிகழ்ந்தாலே
விற்பனை யுண்டு மனமே!

வேளாண்மைக் குறைவால் பயிர்கள்
தாளாகிப் போகத் தாளாத
வேளாளன் தற்கொலை துணிய
வாளா விருந்தது அரசு.

4.64. சிந்தடிப் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

No comments:

Post a Comment