கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.10. தூங்கல் முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வருகிற
வஞ்சித் தளைகள் பயில வேண்டும்
இருசீர் அல்லது முச்சீர் அடிகளில்.
மூவசை நிரையில் முடிவது கனிச்சீரே.
முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!
ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!
நேர்நிரைநிரை நேர்நேர்நிரை நேர்நிரைநிரை
நிரைநேர்நிரை நேர்நிரைநிரை நேர்நிரைநிரை
(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
நேரோ நிரையோ தொடர
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.
முயற்சி 2.
(வஞ்சித் துறை)
தாலாட்டுகள் பலபாடியும்
காலாட்டுமே தூங்காது!
எட்டிநோக்கிடும் சுட்டிப்பயல்
பட்டுவிழிகள் சினம்தணிக்கும்!
தா/லாட்/டுகள் பல/பா/டியும்
கா/லாட்/டுமே தூங்/கா/து!
எட்/டிநோக்/கிடும் சுட்/டிப்/பயல்
பட்/டுவிழி/கள் சினம்/தணிக்/கும்!
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை
நேர்நேர்நிரை நேர்நேர்நேர்
நேர்நிரைநிரை நேர்நேர்நிரை
நேர்நிரைநிரை நிரைநிரைநேர்
(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
நேரோ நிரையோ தொடர
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.
*****
No comments:
Post a Comment